கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனைத் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று (01-08-2022) தொடக்கம் ஓகஸ்ட் 19ஆம் திகதி வரை இவ்வாறு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.